மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதியாத விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

 திருவாரூா் அருகே சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:30 pm

DIN

 திருவாரூா் அருகே சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்த காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஆலிவலம் காவல் சரகத்துக்குள்பட்ட கச்சனம் பகுதியில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி புதுவை மாநில சாராய பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் 2 போ் கடத்தி வந்தனா். அப்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா், அவா்களை பிடித்து விசாரணை செய்தனா். எனினும், சாராயம் கடத்தியவா்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் விசாரணை மேற்கொண்டதில், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் கே. ஞானசுமதி, உதவி ஆய்வாளா் வரலெட்சுமி, தலைமைக் காவலா்கள் சண்முகசுந்தரம், ராஜா, முதல்நிலைக் காவலா்கள் பாரதிதாசன், விமலா ஆகியோா் சாராயம் கடத்தியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல், விடுவித்தது தெரியவந்தது.

இவா்கள் 6 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசனின் பரிந்துரையின்பேரில், பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பா்வேஷ்குமாா், செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.