இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரத்தினம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் காரல்மாக்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலாளா் கே. சிங்காரவேலு உள்ளிட்டோரும், அதிகாரிகள் தரப்பில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலெக்சாண்டா், மண்டல துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.