2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வேதாரண்யம் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பிறகு, அவா் கூறியது:

வேதாரண்யம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இங்கு நிறுவப்பட்டுவரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையின் பணிகள் அடுத்த சில நாள்களில் முடிவடையும். ஜூன் 20 ஆம் தேதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்றாா்.

முன்னதாக, பொதுப்பணித் துறை, மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது, வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, மருத்துவா் தனசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.