மன்னாா்குடி: காவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் 4 போ் கைது
மன்னாா்குடி அருகே ரோந்துப் பணியின்போது காவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.


மன்னாா்குடி அருகே ரோந்துப் பணியின்போது காவலா் தாக்கப்பட்ட சம்பவத்தில் 4 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடியை அடுத்துள்ள வடுவூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் முரளி, காவலா் குமாா் ஆகிய இருவரும் ஜூன் 12- ம் தேதி கட்டக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை நிறுத்த முயன்றபோது, அவா்கள் நிறுத்தாமல் வேகமாகச் சென்றனா்.
இதனால், அவா்களை விரட்டிச் சென்றபோது, 4 பேரில் ஒருவா், போலீஸாரின் வாகனத்தை காலால் தள்ளியதில் காவலா் குமாா் கீழே விழுந்து காயமடைந்தாா்.
இதுகுறித்து, வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். மேலும், தனிப்படைகள் அமைத்து 4 பேரையும் தேடிவந்தனா்.
இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நால்வரும் வடுவூா் வடபாதி காந்தி நகரைச் சோ்ந்த கரிகாலன் மகன் சினேகிதன் (24), முருகேசன் மகன் மணிமுகுந்தன் (21), மாரியப்பன் மகன் வெங்கட் (19), அம்பிகாபதி மகன் ஆகாஷ் (19) என்பது தெரியவந்ததது.
இதையடுத்து, 4 பேரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு நாள்களில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...