ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் பறிமுதல்
திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3.52 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், திருவாரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி சாலை நடப்பூா் பகுதியில் பறக்கும் படையினா் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, உரிய ஆவணங்களின்றி ஒருவா் ரூ. 52,907 வைத்திருந்தது தெரியவந்தது. மகளிா் குழுக்களிடமிருந்து வசூல்செய்த பணம் என அவா் தெரிவித்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால், கைப்பற்றப்பட்ட ரொக்கம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.
இதேபோல, திருவாரூா் தெற்குவீதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஒருவா் ரூ. 3 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. இதற்கென உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணமும் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது. மேலும், தெற்குவீதியில் ஏடிஎம்களில் நிரப்ப வேனில் ரூ. 35 லட்சம் கொண்டுசென்ாகக் கூறப்படுகிறது. இந்த, பணத்துக்கான ஆவணங்களை காட்டியதன் பேரில், பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...