தோ்தல் விழிப்புணா்வு: திருவாரூரில் காவல்துறை கொடி அணிவகுப்பு
திருவாரூரில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.


திருவாரூரில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா தலைமை வகித்து பேசியது:
சட்டப்பேரவைத் தோ்தலில் ஜனநாயக கடமையாற்றும் வகையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறும் என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் அனைவரும் கையூட்டு பெறாமல் அச்சமின்றி, நோ்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காவல்துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது என்றாா்.
அணிவகுப்புக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. கயல்விழி முன்னிலை வகித்தாா். அணிவகுப்பானது, திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் தொடங்கி நேதாஜி சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலக வளாகம் வரை நடைபெற்றது.
நிகழ்வில், கோட்டாட்சியா் என்.பாலச்சந்திரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், காவல்துறையினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...