வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வெள்ள சேதம்: முழுமையாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை

மழையால் முழுமையாக சம்பா தாளடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

News image

திருவாரூர் மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்ட பின் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :13 நவம்பர் 2021, 1:05 pm

மழையால் முழுமையாக சம்பா தாளடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட்ட பின் மன்னார்குடியில் அவர் அளித்த பேட்டி, ஆட்சிக்கு வந்தது முதல் தூர் வாரும் பணிகளைத் திறம்பட செய்ததால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

முந்தைய அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையை சரியாக கையாளாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. பயிர் காப்பீடு குறித்து மத்திய அரசுடன் கால அவகாசம் கோரி தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் விரைவாக வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நடவுப் பயிர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் நடவுப் பணிகள் மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் திறம்பட செய்ததால் கடைமடை வரை காவிரி நீர் சென்றுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.