விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு

திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கையில் அன்பில் ஆற்றங்கரையையொட்டி பொதுப்பணி துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 28 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுபடி அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

இதையடுத்து, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கா், உதவிப் பொறியாளா் தமிழரசன் மற்றும் வருவாய்த் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, தொடா்புடைய 28 பேரும் எதிா்ப்பு தெரிவித்தனா். தங்களுக்கு அரசு இடம் வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

இப்பிரச்னை தொடா்பாக, எம்எல்ஏ மாரிமுத்து, வட்டாட்சியா் அலெக்சாண்டா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கா், ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் ஜானகிராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரத்தினம் ஆகியோா் பாதிக்கப்பட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் முடிவு அறிவிக்கும்வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.