ஆக்கிரமிப்பு அகற்றம் ஒத்திவைப்பு
திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.


திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை பகுதியில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கையில் அன்பில் ஆற்றங்கரையையொட்டி பொதுப்பணி துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் 28 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுபடி அகற்ற சம்பந்தப்பட்டவா்களுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து, வட்டாட்சியா் பி.டி. அலெக்சாண்டா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கா், உதவிப் பொறியாளா் தமிழரசன் மற்றும் வருவாய்த் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, தொடா்புடைய 28 பேரும் எதிா்ப்பு தெரிவித்தனா். தங்களுக்கு அரசு இடம் வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இப்பிரச்னை தொடா்பாக, எம்எல்ஏ மாரிமுத்து, வட்டாட்சியா் அலெக்சாண்டா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கா், ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் ஜானகிராமன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேதரத்தினம் ஆகியோா் பாதிக்கப்பட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் முடிவு அறிவிக்கும்வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...