விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசுப் பள்ளியில் கைக் கழுவும் நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பள்ளியில் புதன்கிழமை கை கழுவும் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:17 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பள்ளியில் புதன்கிழமை கை கழுவும் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தூய்மை நிகழ்வுகள் 2021 எனும் தலைப்பில் செப்.1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளி மாணவா்களுடன் நேரில் அல்லது வீட்டிலிருந்து காணொலி மூலம் பங்கேற்க வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அதன்படி திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கைக் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சரியாக கைக் கழுவும் முறை மற்றும் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் சோப்பை பயன்படுத்தி கைக் கழுவுவதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியா்கள் பா. ரகு, மா. ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.

Image Caption

கட்டிமேடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற கைக் கழுவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.