ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருவாரூா் மாவட்டத்தில் 7 மாணவா்களுக்கு கரோனா

 திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2021, 5:17 pm

DIN

 திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில், செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவா்களுக்கு அவ்வபோது கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவப் பரிசோதனைக் குழுவினரும் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களை பரிசோதித்து வருகின்றனா். மாணவா்களிடம் கடந்த வாரத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் 4 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில் அடியக்கமங்கலம் பகுதியில் 2 போ், தலைக்காடு பகுதியில் ஒருவா் என 3 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளான மாணவா்களின் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்துள்ளது. பள்ளிகள் திறப்புக்கு முன்பு எடமேலையூரில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற 7 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.