தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஒரே நாளில் 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு

திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) ஒரே நாளில் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:09 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (செப்.12) ஒரே நாளில் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு, 633 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்து பேசியது:

கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் 633 இடங்களில் 63,200 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில், இதுநாள்வரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், கட்டாயம் செலுத்திக் கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு, இந்த மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஹேமசந்த்காந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, சுகாதாரத்துறை இணை இயக்குநா் செல்வகுமாா் உள்ளிட்ட அரசு அனைத்துத்துறை அலுவலா்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.