விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:08 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேலப்பெருமழை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதிலமடைந்த இக்கோயில், ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதையொட்டி, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கலசநீா் கடங்கள், வேத விற்பன்னா்களால் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விமான குடமுழுக்கு நடைபெற்றது. மதுரை வீரன் கழுவடியான் உள்ளிட்ட கிராம தேவதைகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்காள பரமேஸ்வரிக்கு மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது.

இவ்விழாவில், சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா். வேதரத்தினம், ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.