தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூட்டுப் பண்ணையப் பயிற்சி

நீடாமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வடுவூா் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு கூட்டுப் பண்ணையம் குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:35 pm

DIN

நீடாமங்கலம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வடுவூா் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுவுக்கு கூட்டுப் பண்ணையம் குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலா் சுரேஷ்குமாா் பங்கேற்று கூட்டு பண்ணையம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் பற்றியும், அங்கக வேளாண்மை மற்றும் வேளாண்மை துறையில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் வைரமுத்து, அட்மா திட்டத்தின்கீழ் நடைபெறும் பயிற்சிகள் பற்றியும், கண்டுணா்வு சுற்றுலா மற்றும் செயல்விளக்கங்கள் பற்றியும் விளக்கிக் கூறி, நீடாமங்கலம் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.

வேளாண்மை அலுவலா், உதவி வேளாண்மை அலுவலா், அட்மா திட்ட பணியாளா்கள், உழவா் உற்பத்தியாளா் குழுவின் தலைவா் த.கோபாலகிருஷ்ணன், செயலாளா் குபேந்திரன் மற்றும் ரிஷியூா் கிராம மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.