மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என்ஜின் கோளாறு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தடையால் நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலையில் அரைமணி நேரம் நின்றது.

News image
நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலை என்ஜினில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக சிக்னல் பாயிண்ட் பகுதியில் நின்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்.
Updated On :25 அக்டோபர் 2021, 4:46 am

DIN

மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் காரணமாக ஏற்பட்ட தடையால் நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகில் திங்கட்கிழமை அதிகாலையில் அரைமணி நேரம் நின்றது.
 
சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடிக்கு அதிகாலையில் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் (மின்சார)ரயிலுக்காக திங்கட்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ரயில்வேகேட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீடாமங்கலம் வந்த மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்ரயில் நிலையத்திற்குள் வராமல் சிக்னல் பாயிண்டில் நின்றது.

Story image

பயணிகளுக்காக நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள், ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் வராதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ரயில்நிலைய ஊழியர்கள் ரயில் நிற்கும் இடத்திற்குச் சென்று பார்த்தனர். மின்சாரம் நின்று வந்ததால் ரயில் என்ஜினும் நின்று போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து என்ஜினில் ஏற்பட்ட சிறியகோளாறு சீராகி மீண்டும் ரயில்நிலையத்திற்குள் வந்து பயணிகள் இறங்கியபின் அரைமணிநேரம் தாமதத்துடன் மன்னார்குடி புறப்பட்டுச் சென்றது. அதன்பின்னர் ரயில்வேகேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை வாகனங்கள் சுமார் 45 நிமிடம் தாமதத்துடன் புறப்பட்டுச் சென்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.