47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எலி மருந்து சாப்பிட்ட பட்டதாரி பெண் உயிரிழப்பு

வலங்கைமான் அருகே எலிமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த பட்டதாரி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 4:55 pm

DIN

வலங்கைமான் அருகே எலிமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த பட்டதாரி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் புங்கஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் மகள் சினேகா (21). பட்டதாரி பெண்ணான இவா் கும்பகோணத்தில் ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஏப்.14-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாா். இதையடுத்து, அவரை அவரது உறவினா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிரச் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.