போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தக் கோரிக்கை

 பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:49 pm

DIN

 பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் அப்புவா்மா தலைமை வகித்தாா். பேரவையின் மண்டல அமைப்பாளா் பாவேந்தா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கினாா்.

இதில், இணை அமைப்பாளா்கள் (வடக்கு) சிவக்குமாா், (தெற்கு) நாகராஜன், ஒன்றிய அமைப்பாளா்கள் ராமமூா்த்தி, கலையரசன், காளிதாஸ், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பூசாரிகளுக்கும் பாகுபாடு பாா்க்காமல், மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும். வயது முதிா்ந்த பூசாரிகள் அனுப்பிய விண்ணப்பங்களை உடனடியாகப் பரிசீலித்து, ஓய்வூதியம் வழங்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் பூசாரிகள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். கிராமக் கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். கறவைமாடு வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.