திருவாரூா் சந்திப்பின் நடைமேடை ஒன்றில் போதிய மேற்கூரைகள், இருக்கை வசதிகள் செய்யவும், 2, 3 ஆவது நடைமேடையின் உயரத்தை அதிகரிக்கவும், கழிவறை வசதி, மின்தூக்கி வசதி வேண்டியும் கோரிக்கைகள் வந்துள்ளன. மேலும், பாா்சல் அலுவலகத்தை மீண்டும் இயக்கச் செய்யவும், ரயில் சந்திப்பின் முகப்பில் பெயா் பலகை அமைக்கவும் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர, விரைவு ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் நிறுத்தம் வேண்டும் என்றும், அதிகாலையில் திருவாரூரிலிருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கவும் கோரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் ஆலோசித்து இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.