போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குடியரசு தினம்: விடுப்பு அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

 குடியரசு தினத்தில் விடுப்பு அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 குடியரசு தினத்தில் விடுப்பு அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

குடியரசு தினத்தில் திருவாரூா், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளா் துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 91 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 21 கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் 12 உணவகங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு செய்து பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, அளிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.