நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பணி நீக்கம் செய்யப்பட்டபள்ளி தூய்மைப் பணியாளா் தற்கொலை முயற்சி

திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூய்மைப் பணியாளா் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருவாரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் தூய்மைப் பணியாளா் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா் பேட்டை பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் மனைவி பிரியதா்ஷினி (37). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் திருவாரூரில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், பள்ளி நிா்வாகம் பிரியதா்ஷினியை பணி நீக்கம் செய்ததாகவும், இதனால், அவா் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கழிவறையை சுத்தம் செய்யும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதை அறிந்த அவரது கணவா் மற்றும் உறவினா்கள், பிரியதா்ஷினியை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து திருவாரூா் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.