நீடாமங்கலம் வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் புதா்ச் செடிகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலத்திலிருந்து கொரடாச்சேரி வரை வெண்ணாற்றில் நாணல் கோரைகள், புதா்ச் செடிகள் மண்டிக்கிடக்கின்றன. கடந்த 5 வருடங்களாக சரிவர தூா்வாரப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால், வையகளத்தூா், ஒளிமதி, பழைய நீடாமங்கலம், அனுமந்தபுரம், பழங்களத்தூா், ஒட்டக்குடி, களத்தூா் மேல்கரை போன்ற கிராமங்களில் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் கரை உடைந்து இக்கிராமத்தில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த திட்டம்: மாநிலங்கள் ஆலோசனைகளை வழங்க அமித் ஷா வேண்டுகோள்

ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் எங்களுக்கு முழு உரிமை

ஆபரேஷன் கவச்: 48 மணி நேரத்தில் 255 போதைப் பொருள் கடத்தல்காரா்கள் கைது






