கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்’

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:30 pm

DIN

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் உத்தரவின் பேரில், 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்யலாம் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, திருவாரூா் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் கடன் பெற்று, அரசாணையின்படி அனைத்து தகுதிகளையும் நிறைவு செய்துள்ள 30,182 பயனாளிகளுக்கு ரூ. 90.12 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள நகைக்கடன்தாரா்கள், தாங்கள் நகைக்கடன் பெற்ற கூட்டுறவு நிறுவனங்களை அணுகி, தள்ளுபடி சான்றிதழை பெற்று, உரிய நகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.