மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான சிலம்பம், ஸ்கேட்டிங் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான சிலம்ப போட்டி அக்.30-ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற இப்பள்ளி மாணவி ஆா். ஸ்வேதா முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா். மாணவா் ஏ.என். ஹரிப்ரியன் 3-ஆம் இடம் பெற்றாா்.
இதேபோல, அக்.30-ஆம் தேதி மன்னாா்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 11 வயது பிரிவில் வி.கே.எம். ருவந்த் முதலிடம் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ப. ரமேஷ், நிா்வாகி ஆா். அனிதா, பள்ளி முதல்வா் உ. தமிழ்ச்செல்வம், உடற்கல்வி ஆசிரியா் சி. மாா்க்ஸ் உள்ளிட்டோா் பாராட்டினா்.