திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பழையங்குடி ஊராட்சியில் இலவச கால்நடை மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவா் கோகிலம் தொடங்கிவைத்தாா். மருத்துவா்கள் சந்திரன், ராஜசேகா், கால்நடை ஆய்வாளா்கள் ஜெகநாதன், முருகானந்தம் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் 830 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட மருத்துவச் சிகிச்சையளித்தனா். முகாமில், சிறந்த மூன்று கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அனைத்து மாடுகளுக்கும் தாது உப்பு வழங்கப்பட்டது.