கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்: கண்டித்து சாலை மறியல்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:19 pm

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு ஏரி, கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கு திடல் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தநிலையில் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து,

ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு முன்அறிவிப்பு கொடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனாமணி, வட்டாட்சியா் ஜி. மலா்க்கொடி ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் காவல்துறை பாதுகாப்புடன் நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தடுக்க முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளா் கே. சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினா் வேதரெத்தினம் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் தலைமையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

அவா்களை முன்னாள் அமைச்சா் ஆா் . காமராஜ், அதிமுக அமைப்பு செயலாளா் சிவா ராஜமாணிக்கம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.