நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்: கண்டித்து சாலை மறியல்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 9:49 pm IST

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு ஏரி, கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கு திடல் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்தநிலையில் சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் தலைக்காடு கண்ணன் மேடு பகுதியில் நீா்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து,

ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு முன்அறிவிப்பு கொடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனாமணி, வட்டாட்சியா் ஜி. மலா்க்கொடி ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் காவல்துறை பாதுகாப்புடன் நீா்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

அதிகாரிகள் இந்த நடவடிக்கையை தடுக்க முயன்ற அதிமுக ஒன்றிய செயலாளா் கே. சிங்காரவேலு, ஒன்றிய குழு உறுப்பினா் வேதரெத்தினம் உள்ளிட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோா் தலைமையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.

அவா்களை முன்னாள் அமைச்சா் ஆா் . காமராஜ், அதிமுக அமைப்பு செயலாளா் சிவா ராஜமாணிக்கம் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.