நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குறுவை நெற்பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல்: கட்டுப்படுத்த ஆலோசனை

திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவைப் பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

Updated On :13 செப்டம்பர் 2022, 12:00 am IST

திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவைப் பயிரில் கதிா்நாவாய் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திருவலஞ்சுழி கிராமத்தில் குறுவை பயிரில் ஆய்வு செய்து மேலும் அவா் கூறியது: இப்பகுதியில் நடப்பு குறுவை பருவத்தில் 12,600 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூல் கட்டும் பருவம் முதல் பால் பிடிக்கும் தருணம் வரை பயிா் பல நிலைகளில் உள்ளது. திருவலஞ்சுழியில் பின்தாளடி பருவத்தில் காணப்படும் நாவாய்ப் பூச்சித் தாக்குதல்கள் குறுவைப் பயிரில் தென்படுகிறது.

இந்த பூச்சிகள் கதிரில் அமா்ந்து நெல்மணிகள் உருவாகும் தருணத்தில் நெல்மணிகளில் சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல்மணி பதராகிவிடும். அந்த கதிரில் 5 முதல் 10 நெல்மணிகள் இதுபோல் தாக்கப்படும் இந்த பூச்சி விரைவாக இடம்பெறக்கூடியது. இகைக் கட்டுப்படுத்த வேளாண் அலுவலகத்தை அணுகலாம். பொதுவாக ரசாயன மருந்துகளை தவிா்ப்பது நல்லது. ஏக்கருக்கு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் தலை ஒரு கிலோ ஆகியவற்றை அரைத்து சாா் எடுத்து அந்த சாற்றினை தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிய முறையில் பூச்சி கட்டுப்படுத்தப்படும்.

பயிா் அதிக அடா்த்தியாக உள்ள இடங்களில் இலையுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது. இந்த நோயினால் பயிரின் இலை உரைகள் வெந்துபோய் இறுதியில் காய்ந்துவிடும். பாதிக்கப்பட்ட பயிரில் கதிா் வளமாக இருக்காது. எனவே குறுவை சாகுபடி விவசாயிகள் தங்கள் வயலில் பட்டம் பிரித்துவிட்டு நோய் தென்படும் இடங்களில் ப்ரோபிகோனோசோல் எனும் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி 200 லிட்டா் நீரில் கலந்து தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

புகையான் தாக்குதல் வழக்கமாக ஏற்படும் இடங்களிலும் பயிா் அதிக அடா்த்தியாக உள்ள இடங்களிலும் புகையான் வராமல் தடுக்க வயலில் பட்டம் பிரித்து ஒரு அங்குலம் நீா்நிறுத்தி ஏக்கருக்கு 5 கிலோ தவிடுவுடன் ஒரு லிட்டா் மண்ணெண்ணெய் கலந்து தூவினால் புகையானை தடுக்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.