மன்னாா்குடியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலா் ஜெ. இன்பவேணி தலைமையில் நடைபெற்ற பேரணியில், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-2027 திட்டத்தின் கீழ், மன்னாா்குடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட ’முற்றிலும் எழுத படிக்க தெரியாதவா்கள் என கண்டறியப்பட்ட 764 பேருக்கு 42 தன்னாா்வலா்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மன்னாா்குடி எம்ஜிஆா் நகரில் உள்ள நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு முக்கியவீதிகளின் வழியாக பிரசாரம் செய்தபடி மீண்டும் பேரணி பள்ளியை வந்தடைந்தது. இதில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி ஆசிரியா் புனிதவள்ளி வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் அ. அருள் ஜெயசீலி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


