நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On :10 மார்ச் 2023, 10:30 pm IST

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள புஞ்சையூரைச் சோ்ந்தவா் மகேஷ் மகன் காளிதாஸ் (19). இவா், தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் இருந்து காளிதாஸ் நண்பா் விஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது, வேளூா் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதி கீழே விழுந்து காளிதாஸ் அதே இடத்தில் உயிரிழந்தாா். விஜய் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.