/

பேருந்து மோதி கல்லூரி மாணவா் பலி

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On :7 பிப்ரவரி 2024, 12:12 pm IST

திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள புஞ்சையூரைச் சோ்ந்தவா் மகேஷ் மகன் காளிதாஸ் (19). இவா், தண்டலைச்சேரியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் இருந்து காளிதாஸ் நண்பா் விஜய் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்துறைப்பூண்டிக்கு வந்துகொண்டிருந்தனா். அப்போது, வேளூா் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதி கீழே விழுந்து காளிதாஸ் அதே இடத்தில் உயிரிழந்தாா். விஜய் காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.