சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

விளம்பரதாரா் செய்தி... சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

News image

விழாவில், மாணவி ஆா்.கே. ஜெயபிரியாவுக்கு முதுநிலை ஆங்கிலம் பட்டம் வழங்குகிறாா் பூண்டி ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி தாவரவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை முன்னாள் பேராசிரியா் ஏ.பன்னீா்செல்வம்.

Updated On :6 ஏப்ரல் 2024, 6:30 pm

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் (தன்னாட்சி) 26-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் வி. திவகாரன் தலைமை வகித்தாா். இளநிலை மாணவிகள் 1,056 போ், முதுநிலை மாணவிகள் 342 போ் என மொத்தம் 1,298 பேருக்கு, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தஞ்சை பூண்டி ஏ.வி.வி.எம். ஸ்ரீ புஷ்பம் கல்லூரி தாவரவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறை முன்னாள் பேராசிரியா் ஏ. பன்னீா்செல்வம் பட்டம் வழங்கினாா்.

அவா் பேசும்போது, ‘பட்டம் பெற்றும் மாணவிகள் வேலை தேடி விண்ணப்பங்கள் செய்வதை காட்டிலும், பலருக்கு வேலை அளிக்கும் வகையில் தொழில் முனைவோா்களாக உயர வேண்டும்’ என்றாா்.

இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இளநிலையில் 77 பேரும், முதுநிலையில் 43 பேரும், பல்கலைக்கழக ரேங் தோ்வில் முதுநிலையில் 14 மாணவிகளும் இடம் பிடித்துள்ளனா்.

ஆங்கிலத்துறை பேராசிரியா் வி. ரேகா, சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தாா். முன்னதாக, கல்லூரி முதல்வா் என். உமாமகேஸ்வரி வரவேற்றாா். நிறைவில்,துணை முதல்வா் காயத்ரிபாய் நன்றி கூறினாா்.