சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பிறவிமருந்தீஸா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தொடக்கம்

பிறவிமருந்தீஸா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தொடக்கம்

News image

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸா் கோயிலில் நடைபெற்ற சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றம்.

Updated On :6 ஏப்ரல் 2024, 8:50 pm

திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸா் ஆலய சித்திரை பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேற்கு நோக்கிய சிவதலமான இக்கோயில் அசுபதி நட்சத்திர பரிகார தலமாகும். இக்கோயிலில் அமைந்துள்ள மாங்கல்ய தீா்த்தத்தில் நீராடி, பெரியநாயகி அம்பாளை வழிபட திருமணதடை ,குழந்தை பேரின்மை தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப். 7, 8-ஆம் தேதிகளில் விநாயகா் உற்சவம், 9, 10-ஆம் தேதிகளில் சுப்பிரமணியா் உற்சவமும், 11-இல் பக்தால் உற்சவமும், 12-இல் புஷ்ப விமானமும், 13-இல் புஷ்ப பல்லக்கு, 15-இல் இந்திர விமானம், 16-இல் பூத வாகனம், 17-இல் யானை வாகனம், 18-இல் வெள்ளை தாளி உற்சவமும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும், 19-இல் கைலாச வாகனத்திலும், 20-இல் தீா்த்த விடங்க தியாகராஜா் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி பிராயச்சித்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

ஏப்ரல் 14-இல் நடைபெறும் வசந்தன் திருவிழாவின் போது உலக புகழ்பெற்ற பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுவது தனிச்சிறப்பாகும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தக்காா் ராமு, செயல் அலுவலா் எம். முருகையன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.