திருவாரூர்
வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நன்னிலம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் சண்முகநாதன் நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு மேற்கொண்டு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வின் போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கண்மணி, வட்டாட்சியா் குருமூா்த்தி, துணை வட்டாட்சியா் கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.