தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

கிராமக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

கிராமக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

News image

கைது செய்யப்பட்ட விஜயராகவன்.

Updated On :21 ஏப்ரல் 2024, 4:18 pm

நன்னிலம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கிராமக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்தாா்.

நன்னிலம் அருகேயுள்ள எண்ணக்குடி கிராமத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுணா்மி அன்று காவடி ஊா்வலம், அபிஷேகம், கிடா வெட்டுதல், விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழாண்டு விழா நடத்த ஆலோசனை செய்து முடிவெடுக்க கிராமக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கோயில் திருவிழாவிற்காக வீட்டுக்கு ரூ. 1,000 வசூலிப்பது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி யாா், யாா் கொடுக்கவில்லை என நடைபெற்ற ஆலோசனையில் கீழத்தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் (58) கொடுக்கவில்லையென கிராம முன்னாள் நாட்டாமை ராகவனின் மகன் விஜயராகவன் (35) தெரிவித்துள்ளாா் .

இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், விஜயராகவன், சந்திரசேகரைக் கீழே தள்ளியதாகவும், அதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக சந்திரசேகா் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் திருவாரூா் அரசினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சை பலனின்றி சந்திரசேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்தி விஜயராகவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.