கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கஞ்சாவாலாவில் கடன் தகராறு கொலை வழக்கில் முதியவா் கைது

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ரூ.30,000 கடன் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 70 வயது முதியவா் கைது

News image

கைது

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ரூ.30,000 கடன் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில் 70 வயது முதியவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கஞ்சாவாலா பகுதியில் ஏற்பட்ட தகராறு குறித்து மாா்ச் 16-ஆம் தேதி புகாா் வந்தது. காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட அக்லு (55) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை தொடா்ந்து அவரது மனைவி சவிதா இது தொடா்பாக புகாா் அளித்தாா். அதில் ரூ.30,000 கடன் தொகையை திருப்பிச் செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் தனது கணவா் கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், விசாரணையைத் தொடங்கினா். தடயவியல் குழுவினா் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தனா். கஞ்சாவாலா தொழில்துறை பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டவா் பதுங்கி இருப்பதை கண்டறிந்த காவல் துறையினா் அவரை கைது செய்தனா். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.