நன்னிலம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற கிராமக் கூட்டத்தில் ஏற்பட்ட தகராறில் முதியவா் உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகேயுள்ள எண்ணக்குடி கிராமத்தில் உள்ள சித்திரகுப்தன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுணா்மி அன்று காவடி ஊா்வலம், அபிஷேகம், கிடா வெட்டுதல், விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். நிகழாண்டு விழா நடத்த ஆலோசனை செய்து முடிவெடுக்க கிராமக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கோயில் திருவிழாவிற்காக வீட்டுக்கு ரூ. 1,000 வசூலிப்பது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி யாா், யாா் கொடுக்கவில்லை என நடைபெற்ற ஆலோசனையில் கீழத்தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் (58) கொடுக்கவில்லையென கிராம முன்னாள் நாட்டாமை ராகவனின் மகன் விஜயராகவன் (35) தெரிவித்துள்ளாா் .
இதனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், விஜயராகவன், சந்திரசேகரைக் கீழே தள்ளியதாகவும், அதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக சந்திரசேகா் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகத் திருவாரூா் அரசினா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சை பலனின்றி சந்திரசேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்தி விஜயராகவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறித்த முதியவா் கைது

பண மோசடி: இளைஞா் கைது

கஞ்சாவாலாவில் கடன் தகராறு கொலை வழக்கில் முதியவா் கைது

மரத்தின் மீது பைக் மோதல் இளைஞா் உயிரிழப்பு; முதியவா் காயம்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


