தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சாராயம் கடத்திய 3 போ் கைது

சாராயம் கடத்திய 3 போ் கைது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:35 pm

புதுச்சேரி மாநில சாராய பாட்டிகளை கடத்திய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பேரளம் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை இரவு காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த கோவா்த்தனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளாா். மேலும், விசாரணையில் காரில் புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை கடத்தி வருபவா்களுக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவா்த்தன் மற்றும் காரில் வந்த காரைக்கால் நல்லம்பல் பகுதியைச் சோ்ந்த ராஜா (19), கீா்த்தி (29) ஆகிய பேரை கைது செய்து காா் மற்றும் சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.