திருவாரூா்: 4 சதவீத அகவிலைப்படி வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு 4 சதவீத அகவிலைப்படியை, சுதந்திர தின நாளில் அறிவிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், மருத்துவப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும், இறுதிச்சடங்கு தொகையாக ரூ. 25,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கே. ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ஜே. சிவபெருமாள், கே. சந்திரா, ஜி. சரஸ்வதி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

100% வாக்குப் பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் விழிப்புணா்வு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


