அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் நலச்சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல்-டிஓடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னாா்குடியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: 1.1.2026 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும், 3 மாதத்துக்கு ஒரு முறை வழங்கவேண்டிய அகவிலைப்படி நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் கே. கலியபெருமாள், டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டதுணைத் தலைவா் பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தை டிஓடி ஓய்வூதியா்கள் சங்க மாவட்டச் செயலா் கே.பிச்சைக்கண்ணு தொடங்கிவைத்தாா். ஓய்வூதியா்கள் நலச் சங்க மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே. கிள்ளிவளவன், மாவட்டக் குழு உறுப்பினா் வி. சரவணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். நலச் சங்க கிளைத் தலைவா் எம். முகமதுயாசின், கிளைச் செயலா் தா்மராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நொய்டா தொழிலாளா்களுக்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

‘ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஓய்வூதியா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



