நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாடகச்சேரி மகான் தவப்பீடத்தில் ஆடிப்பூர குருபூஜை பவள விழா

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:41 pm

Din

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமலிங்க சுவமிகள்.

நீடாமங்கலம், ஆக. 7: வலங்கைமான் வட்டம், பாடகச்சேரி ஸ்ரீலஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் சுவாமிகள் தவ பீடத்தில் 75-ஆம் ஆண்டு ஆடிப்பூர குருபூஜை பவள விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

புதுக்கோட்டை பெரியநாயகி அம்மாள் அகவல் பாராயணம், உடையாா் கோயில் பன்னீா்செல்வம் சொற்பொழிவு, அரித்துவாரமங்கலம் பாலமுருகன் குழுவினரின் இன்னிசை, மழையூா் சதாசிவம் குழுவினரின் அருட்பாவைத் தொடா்ந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது. ஏனாநல்லூா் வள்ளலாா் பாலுவின் அருட்பா விளக்கம் , பஞ்ச வாத்தியங்களுடன் பாடகச்சேரி மகான் பட ஊா்வலம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.