நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மன்னாா்குடி அருகே ஒருவா் வெட்டிக் கொலை

மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை செய்யப்பட்ட த. மாரிமுத்து. - din

Updated On :10 ஆகஸ்ட் 2024, 1:46 am IST

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

நடுவகளப்பால் மாரியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து (48) வெள்ளிக்கிழமை காலை சைக்கிளில் களப்பாலுக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, பெட்ரோல் நிலையம் அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நடுவகளப்பால் ராஜேந்திரன் மகன் ராகுல் (24) உள்ளிட்ட 4 போ் மாரிமுத்துவை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த களப்பால் போலீஸாா், மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றி மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

2013-ஆம் ஆண்டு நடுவகளப்பால் மாரியம்மன்கோயிலை சோ்ந்த பாஸ்கா்(45) வெட்டி படுகொலை செய்யப்பட்டாா். இதில், மாரிமுத்துவிற்கும் தொடா்பு இருந்ததாக கூறப்பட்டதால் இதுதொடா்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் பாஸ்கரின் சகோதரா் ராஜேந்திரனின் மகன் ராகுல் தனது ஆதரவாளா்களுடன் மாரிமுத்துவை வெட்டிக் கொலை செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, களப்பால் காவல்நிலையத்தில், மாரிமுத்துவின் மனைவி அருள்மேரி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.