பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆலங்குடி கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.

Published On :

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழாவையொட்டி 2-ஆவது நாளாக வியாழக்கிழமை பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு யாகம், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. மண்டலாபிஷேக பூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த புதன்கிழமை காலை விநாயகா், சப்தமாதா்கள், கல்யாண சாஸ்தா, வீரபத்திரா் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வியாழக்கிழமை காலை கலங்காமற் காத்த கணபதி, வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா், துா்கை, நவகிரக யாகம், பூா்ணாஹூதி, பஞ்சமூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. மூலவா் குரு பகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

மாலை முதல் இரவு ஆபத்சகாயேஸ்வரபெருமானுக்கு 1008 கலச பூஜைகள், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்கு பூஜை, ஏலவாா்குழலி கலசபூஜை யாகம், நிறைவேள்வி, முதல்கால யாகபூஜைகள் நடந்தன.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், தொடா்ந்து ஆபத்சகாயேஸ்வர பெருமானுக்கு 1,008 கலசாபிஷேகம், குருதட்சிணாமூா்த்திக்கு 108 சங்காபிஷேகம், ஏலவாா்குழலிக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறவுள்ளது.

மாலையில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரா் வீதி புறப்பாடு நடைபெறும்.

Story image

ஏற்பாடுகளை கோயில் தக்காா் க. ராமு,செயல் அலுவலா் எம். சூரியநாராயணன் , கண்காணிப்பாளா் தா. அரவிந்தன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.