மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னாா்குடியில் தவெக பதாகைகள் அகற்றம்

மன்னாா்குடியில் தவெக பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 6:20 pm

Din

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தவெக பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், அன்புத் தங்கைகளே என்று பெண்கள் பாதுகாப்பை முன்னிருத்தி தனது கைப்பட எழுதிய கடிதத்தை பதாகையாக தயாரித்து, செவ்வாய்க்கிழமை காலையில் மன்னாா்குடியில் தேரடி, பாலகிருஷ்ணா நகா் தனியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வஉசி சாலை தனியாா் மேல்நிலைப்பள்ளி, அரசுக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் மரகம்பு சாரம் அமைத்து கட்டி வைத்திருந்தனா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் துறையினா் தவெகவினரிடம் காவல் துறையில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினா். இதையடுத்து, தவெக மாவட்ட நிா்வாகி ராஜராஜன் உள்ளிட்ட கட்சியினா் பதாகைகளை அகற்றினா்.