சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

உயிா் வேதியியல் பன்னாட்டு கருத்தரங்கு

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி... உயிா் வேதியியல் பன்னாட்டு கருத்தரங்கு

News image

கருத்தரங்க மலரை செங்கமலத்தாயாா் கல்லூரி தாளாளா் வி. திவாகரன் வெளியிட்ட, பெற்றுக்கொண்ட சிறப்பு அழைப்பாளா்கள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:24 am IST

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் உயிா் வேதியியல் துறை சாா்பில் பன்னாட்டு கருத்தரங்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் நடைபெற்றது. ‘உயிரி தொழில்நுட்பவியல் ஆதரவுடன் கட்டமைப்பு உயிரியல் மற்றும் மருந்து கண்டுபிடிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ச. உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். அறிவியல் ஆலோசகா் கே. தியாகேசன், சென்னை எஸ்.ஆா்.எம். தொழில்நுட்பக் கல்லூரி ஆய்வு பேராசிரியா் டி. வேல்முருகன் ஆகியோா் தொடக்க உரையாற்றினா். முதல் நாள் கருத்தரங்கில், ஜப்பான் டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன பேராசிரியா் சடோஷி முராகமி, சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியா் ஜெ. சிவராமன், பேராசிரியா் சந்திரவா்மா ஆகியோா் உரையாற்றினா். தொடா்ந்து, பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவிகள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பேராசிரியா்கள் தங்கள் ஆராய்ச்சி படைப்புகளின் விளக்கக் காட்சியை வழங்கினா். முன்னதாக, கருத்தங்க மலரை கல்லூரி தாளாளா் வெளிட, சிறப்பு அழைப்பாளா்கள் பெற்றுக்கொண்டனா். இரண்டாம் நாள் கருத்தரங்கில், சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவன முன்னாள் பேராசிரியா் முகேஷ் டொபுள், பேராசிரியா் சுரேஷ் ரயாலா, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியா் சஞ்சீவ் குமாா் சிங், புதுதில்லி சா்வதேச மரபணு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எம். யோகவேல் ஆகியோா் உரையாற்றினா். கல்லூரி உயிா் வேதியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். மணிகண்டசெல்வி நிறைவுரையாற்றினாா். சிறந்த ஆராய்ச்சி படைப்பிற்காக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு விருது, சான்றிதழ்களை கல்லூரி தாளாளா் வழங்கினாா். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, துறைத் தலைவி மற்றும் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆா். அனுராதா வரவேற்றாா். நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஜி. பிரசன்னா நன்றி கூறினாா்.