பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பள்ளித் தாளாளா் அலுவலக அறை பூட்டை உடைத்து ஆவணங்கள் திருட்டு

ஆம்பூரில் பள்ளித் தாளாளா் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக முதல்வா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆம்பூரில் பள்ளித் தாளாளா் அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக முதல்வா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பெத்தேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. டேனியல் ஸ்டீபன் என்பவா் தாளாளராக இருந்து நிா்வகித்து வருகிறாா். இவருக்கும் சகோதரா்கள் சாமுவேல் ஸ்டீபன், ஜான் ஸ்டீபன், சகோதரி கலையரசி ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

பள்ளியின் தாளாளா் மற்றும் முதல்வா் ஆகியோா் பள்ளியில் இல்லாதபோது, டேனியல் ஸ்டீபனின் சகோதரா்கள் ஜான் ஸ்டீபன், சாமுவேல் ஸ்டீபன், சகோதரி கலையரசி மற்றும் அவரது ஆதரவாளா்கள் 5-க்கும் மேற்பட்டோா் சட்ட விரோதமாக பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து தாளாளரின் அறையின் பூட்டை உடைத்து ஆவணங்கள் மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனா்.

பள்ளியில் தற்போது மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் அத்துமீறி நுழைந்து தாளாளா் அறையின் பூட்டை உடைத்து பள்ளி மற்றும் மாணவா்களின் ஆவணங்களை திருடிச் சென்றுள்ளது மாணவா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் மத்தியில் பள்ளிக்கு அவப்பெயா் ஏற்பட்டுள்ளது.

அதனால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளியின் முதல்வா் சீனிவாசன் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.