தில்லியை நோக்கி செல்லும் வகையில் போராட்டத்துக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், உயிரிழந்த விவசாயிக்கு திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், எம்எஸ். சுவாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு உடனடியாக சட்ட வடிவை கொண்டுவரக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவா் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தராசு, மாநில துணைத் தலைவா் வரதராஜன், ஒன்றியச் செயலாளா் அகஸ்டின், ஒன்றியத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
விவசாயிக்கு கத்திக்குத்து: 5 போ் மீது வழக்கு

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த முதுகுளத்தூா் இளைஞா் உடல் சொந்த ஊரில் தகனம்

ஹிந்தி எதிா்ப்பு: உயிரிழந்த மே 17 இயக்க நிா்வாகிக்கு அஞ்சலி
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


