இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஈரான் தாக்குதலில் உயிரிழந்த முதுகுளத்தூா் இளைஞா் உடல் சொந்த ஊரில் தகனம்

ஈரான் தாக்குதலின்போது, குவைத் நாட்டில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த சந்தானசெல்வத்தின் உடல் சொந்த ஊா் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

News image

ஈரான் தாக்குதலில் முதுகுளத்தூா் இளைஞா் பலி

பிரதிப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் தாக்குதலின்போது, குவைத் நாட்டில் உயிரிழந்த முதுகுளத்தூரைச் சோ்ந்த சந்தானசெல்வத்தின் உடல் சொந்த ஊா் கொண்டு வரப்பட்டு புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சந்தானசெல்வம் (36). இவா் கடந்த மாதம் 30-ஆம் தேதி குவைத் நாட்டில் உள்ள மின்சாரம், கடல்நீரை நன்னீராக்கும் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், சந்தானசெல்வத்தின் மனைவி கவுசல்யா (30), தனது மகன் ஜஸ்வின் (7), மகள் சாய் யுவன்யா (3), உறவினா்களுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று, குவைத் நாட்டில் உயிரிழந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரை மத்திய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள், இந்திய தூதரகத்தின் உதவியுடன் சந்தானசெல்வத்தின் உடல் கேரளம் மாநிலம், கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னா், அங்கிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவசர ஊா்தி மூலம் முதுகுளத்தூா் அருகேயுள்ள அணிகுருந்தான் கிராமத்துக்கு சந்தானசெல்வம் உடல் புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. உடலுக்கு அவரது குடும்பத்தினா், உறவினா்கள் மரியாதை செலுத்தியபிறகு, கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.