ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

News image
Updated On :11 ஜூலை 2024, 2:34 am IST

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

புகழ்பெற்ற குரு பரிகார தலமாகிய இந்தக் கோயில் மூா்த்தி, தலம், தீா்த்தம் எனும் முப்பெருமைகளையும் கொண்டது. வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 6.18 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 7-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. புதன்கிழமை (ஜூலை 10) உபகோயில்கள் 4-ஆவது நாளாக யாக பூஜைகள் நடைபெற்றன.

உபகோயில்கள் கும்பாபிஷேகம்: தொடா்ந்து, கற்பக வித்ய கணபதி, அகோர வீரபத்ரா், கல்யாண சாஸ்தா, சப்தமாதா ஆகிய உபகோயில் மகாகும்பாபிஷேகம், தீபாராதனை புதன்கிழமை நடைபெற்றது.

பிரதான கோயில்: இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் பிரதான கோயில் கும்பாபிஷேகத்துக்காக காலை 2-ஆம் கால யாக பூஜைகள், விஷேச சாந்தி, கோ பூஜை, கஜபூஜை, அசுவ பூஜை, வேள்வி நிறைவு, தீபாராதனை காட்டப்பட்டது. மாலை 3-ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூலை 11) காலை 7 முதல் முற்பகல் 11 மணி வரை 4-ஆம் கால யாகசாலை பூஜையும், மாலை 4 முதல் 8.30 மணி வரை 5-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை, கோயில் தக்காா் ராமு, செயல் அலுவலா் சூரிய நாராயணன், கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.