மதுவிலக்கு பிரிவு தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்
திருவாரூா் அருகே மது பாட்டில்களை கடத்தி வந்த வாகனத்தை, கையூட்டு பெற்றுக்கொண்டு, வழக்குப் பதியாமல் விட்ட இரண்டு மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா்கள் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.









