திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரயில் பயணச்சீட்டுகள் விற்றவா் கைது

ரயில் பயணச்சீட்டுகள் விற்றவா் கைது

News image
அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டுகள் விற்றவரை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்.
Updated On :21 ஜூன் 2024, 4:33 pm

Din

திருவாரூா் அருகே அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டு விற்றவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே அனுமதியின்றி ரயில் பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் மேற்கொண்ட சோதனையில், பெருந்தரக்குடி, மேப்பாலம் அருகே வீரா நகரைச் சோ்ந்த எஸ். மாறன் (47) என்பவா், அனுமதியின்றி கணினி மூலம், ரயில் பயணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.

அவரிடமிருந்து 23 இ-டிக்கெட்டுகள், காலாவதியான 68 இ-டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.1,31,026 ஆகும். அவரை கைது செய்த ரயில்வே போலீஸாா், திருவாரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.