விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

திருக்கு முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

News image

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாவட்டக் கல்வி அலுவலா் மாதவன்.

Updated On :3 மே 2024, 10:00 pm

Din

திருச்சியில் நடைபெற்ற திருக்கு முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற திருவாரூா் மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி மாணவா்களிடையே திருக்கு படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருச்சி திருமூலநாதா் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் மே 1 ஆம் தேதி திருக்கு முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அந்த வகையில், பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா தலைமையில் திருச்சியில் நடைபெற்ற போட்டியில் திருவாரூா் ஜிஆா்எம் அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி தரணி பங்கேற்று, ‘திருக்குறல் செல்வி’ பட்டத்தையும், ரூ.2,000 பரிசு, சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 500 ஆகியவை பெற்றாா்.

இதையொட்டி, திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில் மாணவியின் வெற்றிக்கு பயிற்சி அளித்த தாயாா் ஜான்சி, வழிகாட்டி ஆசிரியா்களாக பணியாற்றிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் தமிழ்க் காவலன், வடகரை அரசு உயா்நிலைப் பள்ளி தமிழாசிரியா் நளாயினி ஆகியோருக்கும், வெற்றி பெற்ற மாணவி தரணிக்கும் மாவட்டக் கல்வி அலுவலா் மாதவன் பாராட்டுத் தெரிவித்தாா்.