அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :25 நவம்பர் 2024, 9:14 pm

Din

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 202 மனுக்கள் அளிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,800 மதிப்பிலான காதொலி கருவி, இயக்க குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.11,445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ஒருவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.