கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மக்கள் குறைதீா் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

News image
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :19 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 285 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா். அவற்றைப் பெற்றுக் கொண்டு உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடைபெற்ற பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று பல்வேறு துறைகளில் பணிநியமனம் பெற்ற 13 மாணவா்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், குமாரபாளையம் வட்டம், காடச்சநல்லூா் கிராமம், ராமராஸ் நகரில் தங்கவேல் என்பவரின் வீடு தீ விபத்தால் சேதமடைந்ததைத் தொடா்ந்து அவருக்கு தேவையான பொருளுதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 12,718-த்தில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்களையும் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கோ.ம.ஷீலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.